சனி, 16 ஜனவரி, 2010

உறுதி......


நான் ஒரு
ராசி-இல்லாமனிதன் ....
எதற்க்கும் ராசி -
இல்லாஒரு ஜென்மம்.....
அம்மாவிடம் சாப்பிட ஆசைப்பட்டேன் -
ஆனால்கிடைக்கவில்லை
அப்பாவின்சொல்லுக்கு -
அடங்கிபோக விரும்பினேன் -
ஆனால் முடியவில்லை...
அண்ணாவோடு
கை கோர்த்து
நடக்க ஆசைபட்டேன் -ஆனால்
அவன் சிதறி போனான்.....
உன் அன்பில் -என்
கவலைகள் எல்லாம் -மறந்து
சில மாதங்கள்
வசந்த காலத்தில் வாழ்தேன் -
ஆனால் அதற்க்கும்
ஆயுள் -நீளமில்லைஎன்று
தூது விட்டாய்........
இருந்தும் -நான்
போரிட நிணைத்தேன் -ஆனால்
உன் உயிரான உறவின் -நிலை
என்னை ஊமையாக்கி-ஒரு
மூலைக்குள்
முடங்கி இருக்க வைகின்றது...............
ஆனாலும் நான்
உன் நிணைவுகளோடு -
என் ஜீவன் உள்ள
காலம் வரை கனவுகளோடு -
நான் வாழ்வது உறுதி......

வலிக்கின்றது.........


வலிக்கின்றது -
என்நெஞ்சுக்குள்
முள்குத்துவதாய் வலிக்கின்றது......
தட்டச்சில்
எழுத்துக்கள் பதிக்க
முடியவில்லை-
என் கண்ணீர் கண்னை
மறைக்கின்றது........
யாரோ என்
மனதுக்குள் கைவிட்டு
பிசைவதாய் -
நான் உணர்கின்றேன்.........
வலிக்கின்றது
ஆனால்
வெளியே சொல்ல
முடியவில்லை இந்த
வலிகளைவிட -
எனக்கு மரணம்
சுலபமாய் இருக்கும்.......
ஆனால்
நீ
என்னிடம் பெற்றுக் கொண்ட
சத்தியம் அதற்க்கும்
வழி விட வில்லை..........
ஆனால் இனி வலிகளில் -
நான் மரணித்துப்போவேன்.........

மடிகின்றேன்............


நிணைவை
கொல்ல முடியாமல்
அதைவெல்லவும்
முடியமால் நான்
தினம் சாகின்றேன்..........
தவிப்புக்கள் மனதில்
உப்பு கரிப்புக்கள் கண்ணீரினால்......
கனவுகள் எல்லாம் -
ஏதோஒரு இருட்டு மண்டபத்தில் -
மங்கலாய்த் தெரிகின்றது...........
என் உயிரின் ஒசை -
எனக்குத் தெளிவாய் கேட்கின்றது-
அது
அறுந்துபோன பட்டமாய்...........
விட்டில் பூச்சி விளக்கில் -
விழ்ந்து மடிந்து போகும்-
நான் என் உணர்வுகளில் மடிகின்றேன்............

உனக்கு இல்லை ...........


மரணம் அழகானது -ஆனால்
உன் மனதில் வாழும்
ஆசைகள்இன்னும் அழகானது.......
மரணிக்க நீ
நிணைத்தாலும் உன்னால்-………….
ஒருபோதும்முடியாது...........
உன் மனதுக்குள் வாழும்
உன் காதல்
உன்னை மரணிக்கவிடப்போவதில்லை..........
மரணம் கூட
உன்னை ஏற்றுகொள்ளப்போவதில்லை.....
அதைவிட -
உன்
மனதுக்குள் வாழும்
அவன்நிணைவுகள் உன்னை-
மரணிக்கவிடபோவதில்லை......
இதை விட உன்னை
சுற்றிவலம் வரும் உன்
ஆசைகளை மதிக்காத
உன் உறவுகளை விட்டு
உன்னால்ஒருபோதும்
மரணிக்க முடியாது..........
காரணம் உனக்கு
எதிலும் காதல் உண்டு..........
ஆக மரணம் அழகானதுதான்
அது உனக்கு இல்லை ..........

மரணம்.............


என் உதிரத்தின் நிறமாய் -
நீ வேண்டும்..
என்சுவாசமாய்
நீ வேண்டும்..........
என்நிணைவுகளின் சாட்சியாய்-
நீ வேண்டும்........
என் இதழ்களின் புண்ணகையாய்-
நீ வேண்டும்...........
என் இதய துடிப்பின்
ஒசையாய்-----
நீ வேண்டும்.........
எனக்கு மட்டும் -……..
நீ வேண்டும்......
இல்லையென்றால்
மரணம் என்பது -………
இப்போதே எனக்கு
வேண்டும்........

என்பாக்கியமல்லவா...


உனக்காக
காத்திருக்கின்றேன் நீ
தந்துவிட்டுபோன
முத்தம்காய்ந்து போனாலும் -அதன்
தடங்கள் இன்னும் அழியவில்லை............
நீ
சிரித்துகொண்டு என்னைவிட்டு
விடை பெற்றாலும்
நான்
மனதுக்குள்
அழுதுகொண்டுவிடை
கொடுப்பது யார் அறிவார்.............
மரணத்துக்கு
அழாதவர் எவர் உன்
ஒவ்வரு நாள்-----
விடைகொடுப்பும்
எனக்கு மரணத்தின் வலிகள்தான்.......
ஆனாலும்அந்த வலிகளின்
உணர்வுகூட -----
எனக்கு சுகம்தான்...........
காரணம் உனக்காக -----
நான்மரணிப்பது -
என்பாக்கியமல்லவா...

உன் வரவால்............


பாலைவனத்தில்
மணல் புழுதிகளில் -
என்கனவுகள் அடிபட்டு-
வழித்தடம்மாறி வாழ்க்கை -
இல்லைஎன்ற வலிகளில் ......
வழி தெரியாமல் -
விழிபிதுங்கி வலிகளை
சுமந்துவாழ்வின் எல்லையில் -
நான்இருப்பதாய் எண்ணிக்கொண்ட-
அந்தநாட்களில்
என்
அந்த இருண்ட நாட்களில் -
உன்தரிசனம் எனக்கு-
ஒன்றை புரிய வைத்தது.......
இன்னும் நான்வாழ்க்கையில்
வாழ்வேன்வாழ்வதற்க்காய் -
நான்படைக்கப்பட்டவன் என்று........
உனக்கு ஒன்றுதெரியுமா?
அன்று-நான்பார்த்தபாலைவனம் -
அழகில்லைஆனால் -
இன்றுநான் கண்ட பாலைவனம்
கொள்ளையழகாய் -என்கண்களுக்கு
தெரிகின்றது......
எல்லாம் உன் வரவால்....

கருணை கேட்கவில்லை........


பதவியும் வேண்டாம்
பட்டவும்
வேண்டாம்எனக்கு
நின்மதி மட்டும்
போதும்நடிப்புக்குள் வாழ்வதை -
விடநெருப்புக்குள் -
எரிந்துபோகலாம்....
.ஏமாற்றங்களைவிட -
மரணம்சுகமானது......
சுற்றம் எல்லாம்
பெய்யாகிப்போனதால் -
என்மனவும் கல்லாகிப் போனதோ.....
.கருணை கேட்கவில்லை-
ஆனால்நட்பை
மட்டும்தான் கேட்கின்றேன் ...........

மீண்டும்..............!!!




மீண்டும் மீண்டும் வருவேன்
என்னைமரணிக்க வைத்தாலும் -
நான்வருவேன்
காரணம் என்
ஜீவன்உலாவும்
பூஞ்சோலை-இது
என் உலகம் இது வல்லவா.......
என்முக மூடிகள் மாறலாம் -
ஆனால்என் முகம்
மாறப்போவதில்லை.....
.மேடு பள்ளம் வரலாம் -
ஆனால்அதில் அமிழ்ந்து போக -
நான் களிமண்
இல்லைமீண்டும்
மீண்டும் -நான்வருவேன்
வேஸங்களைமாற்றிக்கொண்டு..................!!!!

என் ஆசை


நான்

குழந்தையாய் இருக்க

ஆசைப்பட்டேன்

ஆனால்

காலம் என்னை

முழுமனிதனாய் மாற்றி


விட்டது ................

மருந்து.........!!


உன்னை
நிணைத்து -நான்
இப்போது மன வலிகளை
மறக்க மருந்து சாப்பிடுகின்றேன்.........
அது என்னை
மெல்லக் கொல்லும் -அது
எனக்குத் தெரியும்......
ஆனால்
நீ இனி எப்போதும்
என்னிடம் வர போவதில்லை........
உன்னை மறக்க
முடியவில்லை அதனால்
நான்
மரணிக்க நிணைக்கின்றேன்.....
இது
தவறுமில்லை சரியுமில்லை.......

உணர்ந்து கொண்டேன்……………….!!

என் ஜீவனே-நீ
என்னை பிரிந்துபோனாயா
நான் இப்போது ………………………………!!!!!

உயிரில்லாதா ஜடமாக –ஏன்
இருக்கின்றேன்-ஆனால்
ஜடத்துக்குள் உன் நிணைவுகள்………………

என்னை மறந்து –நான்
பலகாலம் –ஆனாலும் –உன்
நிணைவுகள் மட்டும் விலகவில்லை……………!!!!!!!

உயிர் என்னை விட்டு பிரிந்தவேளை
நான் உணராத வலி –உன்
பிரிவில் உணர்ந்து கொண்டேன்……………….!!